புதன், அக்டோபர் 17, 2012

அரசுக்கு ஓர் ஆலோசனை




நூல் அறிமுகம் 

நூல்விவசாயிகளைப் பாதுகாப்போம் 
ஆசிரியர்சு.சண்முகவேல்,  
பக்கங்கள்: 80விலைரூ. 40.00
வெளியீடுதிருப்பூர் அறம் அறக்கட்டளை,    
          எண்: 97/98 , மிஷன் வீதி, திருப்பூர்- 641604.


விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சு.சண்முகவேல் ஈரோட்டில் பதிப்புத் துறையில் பணி புரிபவர். தொழில் மாறினாலும், தனது பாரம்பரிய வேரை மறக்காமல்தற்போது நலிவடைந்து வரும் விவசாயத்தைக் காக்க என்ன செய்யலாம் என்பது குறித்து ஆராய்ந்து, தனது சொந்த அனுபவங்களின் அடிப்படையில் இந்த நூலை எழுதி இருக்கிறார்.

விவசாயம் என்பது நமது நாட்டில் இப்போது துக்கமான ஒரு சுமையாக மாறி வருகிறது. பல நூறு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி கூட, தனது நிலத்தை கூறு போட்டு   விற்றுவிட்டு வேறு தொழிலில் புகுவது சாதாரணமாகி விட்டதுபெரு விவசாயிகளின் நிலைமையே இப்படி என்றால், சிறு விவசாயிகளின் நிலையைச் சொல்ல வேண்டியதில்லைஇயற்கைச் சீற்றங்களில் பாதிப்புதண்ணீர்ப் பற்றாக்குறைஇடுபொருள் விலை உயர்வு,  விளைபொருளுக்கு தகுந்த விலை கிடைக்காமை, வேலையாட்கள் தட்டுப்பாடு, அரசின் பாராமுகம் போன்ற காரணிகளால் விவசாயம் செய்வதே கொடுங்கனவாக மாறி இருக்கிறது. ஏற்கனவே விவசாயம் செய்ய முடியாமல் தத்தளிக்கும் அவர்கள், காலத்தின் கோலத்தால் அதிலிருந்து தப்பினால் போதும் என்று ஓடுகிறார்கள். விளைவாக, விளைநிலங்கள் மனைப் பிரிவுகளாகின்றன.

இந்த நிலை நீடித்தால் என்ன ஆகும்?  1870-களில் இந்தியாவில் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தால் லட்சக் கணக்கானோர் பலியான கதை போன்ற துயரம் மீண்டும் நிகழும். 130 கோடி மக்களுக்கு உணவளிக்க முடியாவிட்டால், பெரும் வன்முறையும் சமூகச் சீர்குலைவும் ஏற்படும். அந்த நிலையை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்கிறார் நூலாசிரியர்.

   இந்த நிலைக்குத் தீர்வென்ன? பிரச்னை தெரிந்துவிட்டாலே பாதித் தீர்வு கிடைத்து விடும். அதுபோல, விவசாயத்தைச் சீர்குலைக்கும் காரணிகளைக் கண்டறிந்து பட்டியலிடும் ஆசிரியர், அதற்கான தீர்வுகளை தனக்குத் தெரிந்த அனுபவ ஞானத்துடன் கூறி இருக்கிறார். அரசு செய்ய வேண்டிய சில செயல்திட்டங்களை முன்வைத்து, அதற்கான வழிமுறைகளையும் கூறுகிறார். இந்த நூலில் உள்ளவை இறுதியான திட்டங்கள் அல்ல.  எனினும், விவசாயம் மேம்பட அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகள் பல இதில் இருக்கின்றன. குறிப்பாக விவசாயிகளுக்கான நஷ்டஈடு திட்டம், அவர்களை தடம் மாற்றாமல் பயணிக்க வைப்பதாக உள்ளதைக் குறிப்பிடலாம்.

   உண்மையில் இதுபோன்ற ஆய்வுகள் அரசால் நடத்தப்படும் வேளாண் பல்கலைக்கழகங்கள்  செய்ய வேண்டியவை;  விவசாய சங்கங்களும் வேளாண் விஞ்ஞானிகளும்  கவலை கொள்ள வேண்டியவைஇதை விவசாயக் குடிமகன் என்ற முறையில் செய்திருக்கும் நூலாசிரியர் சு. சண்முகவேல் பாராட்டுக்குரியவர். இந்நூலை வெளியிட்டுள்ள திருப்பூர் அறம் அறக்கட்டளையின் பணி பாராட்டுக்குரியது. இந்நூலை விவசாய வளர்ச்சிக்குப் பாடுபடும் அனைவரும் படிப்பது நாட்டுக்கு நல்லது.  

----------------------
விஜயபாரதம் (19.10.2012)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக